2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அமரதேவ ஆசிரமத்தின் நிர்மாணிப்பு பணிகள் – கலாநிதி பண்டிதர் அமரதேவ அவர்களினால் சங்கீத துறைக்காற்றிய மெச்சத்தகு தேசிய சேவையினை நன்றியறிதலுடன் மெச்சும் பொருட்டு 'அமரதேவ ஆசிரமம்' என்னும் பெயரில் சுவடிகாப்பகம், நூலகம் மற்றும் நூதனசாலை என்பவற்றைக் கொண்ட சங்கீத ஆசிரமொன்றை பத்தரமுல்லை 'அபே கம' மனையிடத்தில் தாபிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகள் கையளிக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் செயலாற்றுகை எதிர்பார்த்த மட்டத்தில் இருக்காததன் விளைவாக உரிய உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய நிர்மாணிப்பு பணிகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான நிறுவனமொன்றை அரசாங்கத்தின் முறையான கேள்வி முறையை பின்பற்றி தெரிவு செய்யும் பொருட்டு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |