• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
- பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, இந்த விமான நிலையத்திலிருந்து பிராந்தியத்திற்கான சர்வதேச விமான பயணங்களின் கையாள்கை பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒத்துழைப்பினைத் தெரிவித்து இந்திய அரசாங்கமானது இலங்கை நாணயத்தில் 300 மில்லியன் ரூபாவைக் கொடையொன்றாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முனைவிடத்தை மாற்றுதல், மின்சாரம் வழங்குதல், பொதுப்பயன்பாட்டு சேவைகள் மற்றும் பயண சேவைகள் போன்ற துறைகளில் வசதிகளை விருத்தி செய்வதற்காக இந்தக் கொடையினை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.