2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் உத்தேச அதிவேகப்பாதை வலையமைப்பு நிர்மாணிப்பினை நடைமுறைப்படுத்தல் – முழுநாட்டையும் தழுவம் விதத்தில் பின்வருமாறு அதிவேகபாதை வலையமைப்பொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
* மத்திய அதிவேகப்பாதை கருத்திட்டத்தின் கீழ் கடவத்தை - மீரிகம, மீரிகம – குருநாகல், பொத்துஹெர – கலகெதர மற்றும் குருநாகல் - தம்புள்ளை என 04 கட்டங்களில் நிர்மாணிப்பு பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்தல். * ருவன்புர அதிவேகப்பாதை கருத்திட்டத்தை கஹதுடுவ – இங்கிரிய, இங்கிரிய – இரத்தினபுரி மற்றும் இரத்தினபுரி - பெல்மடுல்லை என 03 பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தல். * கிழக்கு அதிவேகப்பாதை கருத்திட்டத்தை மத்தல விமான நிலையத்திலிருந்து வெல்லவாய, சியம்பலாண்டுவ ஊடாக பொத்துவில் பிரதேசத்தை இணைத்து நடைமுறைப்படுத்தல். இதற்கிணங்க மத்திய அதிவேகப்பாதை கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்கும் ருவன்புர அதிவேகப்பாதையின் I ஆம் பகுதிக்கான பிரேரிப்பினை M/s CNTIC நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் இந்த கருத்திட்டத்தின் II ஆம் பகுதியை நிர்மாணிப்பதற்காக போட்டி அடிப்படையில் ஆர்வ வௌிப்படுத்தல்களைக் கோருவதற்கும் கிழக்கு அதிவேகப்பாதை கருத்திட்டத்திற்கான சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்வதற்கும் நிர்மாணிப்பு பணிகளுக்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வௌிநாட்டு வளங்கள் திணைக்களித்தினால் நடவடிக்கை எடுப்பதற்கும் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |