2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யப்பான் கருத்திட்டமல்லாத மானிய உதவியின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் பொருட்டு 320 மில்லியன் ரூபாவைக் கொண்ட (200 மில்லியன் யப்பான் யென்) மானிய உதவி - 2020 – கடந்த காலத்தில் இலங்கையில் போதைப்பொருள் சார்ந்த செயற்பாடுகளின் வியாபிப்பு அதிகரித்துள்ளமை நாட்டில் சமூக பிரச்சினையாக உருவாகியுள்ளதெனவும் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பாரிய அளவில் போதைப்பொருள்களை கொண்டு செல்பவர்களையும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் இனங்காண்பதற்குத் தேவையான நவீன உபகரணங்களை பெற்றுக் கொடுப்பது அத்தியாவசியமானதெனவும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க இலங்கை அரசாங்கத்தினால் செய்யப்பட்ட கோரிக்கையின்மீது போதைப்பொருள் தொடர்புபட்ட செயற்பாடுகளை புலனாய்வு செய்வதற்கும் கண்டுபிடிப்பதற்கும் தேவையான உபகரணங்களை இலங்கை பொலிசுக்கு பெற்றுக் கொள்வதற்காக 200 மில்லியன் யப்பான் யென்கள் (அண்ணளவாக 320 மில்லியன் ரூபா) மானியமொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன் பொருட்டு பரிமாற்றல் பத்திரங்களினல் கைச்சாத்திடுவதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |