2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
50,000 தொழிலற்ற பட்டதாரிகளுக்கும் டிப்ளோமாதாரிகளுக்கும் தொழில் வழங்குதல் - தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டத்திற்கு சமமான தகமையொன்றாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் தகைமைகளை கொண்டுள்ள டிப்ளோமாதாரிகள் அடங்கலாக 50,000 பேர்களை தொழிலுக்கமர்த்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளுக்கும் டிப்ளோமாதாரிகளுக்கும் பயிலுநர் நியமனக் கடிதங்களை வழங்குதலை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் உரிய மாவட்ட செயலாளர்களினால் / அரசாங்க அதிபர்களினால் மேற்கொள்தல். * பயிலுநர் பயிற்சி காலப்பகுதிக்குள் இனங்காணப்பட்ட நிறுவனங்களுக்கு இணைத்து உரிய பயிற்சியினை வழங்குதல். * ஒரு வருட திருப்திகரமான பயிற்சி காலத்தின் முடிவில் அவர்கள் சேவையாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள கிராமிய பிரதேசங்களில் மத்திய அரசாங்க மற்றும் மாகாண அரசாங்க சேவைக்குரிய நிறுவனங்களில் இணைப்பதற்கும். |