2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்தி கருத்திட்டம் - கட்டம் II படிநிலை 2 பொதி அ – 2025 ஆம் ஆண்டளவில் பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தினால் கையாளப்படும் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை 20 மில்லியன் வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றமையினால், இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு விமான பயணிகள் முனைவிடம் சார்ந்த ஆற்றலை அதிகரிக்கும் பணிகள் தாமதப்படுத்தாது மேற்கொள்வது அத்தியாவசியமானதாகும். இதற்கிணங்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் கட்டம் II படிநிலை 2 பொதி அ விற்குரிய ஒப்பந்தத்தை மொத்தப் பெறுமதியான 41,553.89 யப்பான் யென் மற்றும் 35,135.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு Taisei Corporation நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |