2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனியை கலைத்து மூடுவதற்காக வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அங்கீகாரத்தை இரத்துச் செய்தல் – உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படாது மூடப்பட்டுள்ள அரசாங்க தொழில்முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியொன்றாக இனங்காணப்பட்டுள்ளதோடு, தற்போது உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படாத மீள் கட்டமைப்பதற்கான தேவையுடன்கூடிய அரசாங்க தொழில்முயற்சிகள் அனைத்தையும் மீள ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனியின் கீழுள்ளதும் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுமான வாழைச்சேனை மற்றும் எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலைகளின் உற்பத்தி பணிகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிப்பட் டுள்ளதோடு, இதற்குரியதான சாத்தியத்தகவாய்வு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனி செயற்பாட்டு ரீதியில் இருக்க வேண்டியது அத்தியாவசிய மாகையினால் இந்தக் கம்பனியை கலைத்து மூடுவதற்கும் அங்கு தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஊழியர்களின் சேவையை முடிவுறுத்து வதற்காக தன்னார்வ ஓய்வூதிய நட்டஈட்டு முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்குமாக அமைச்சரவையினால் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளத் தீர்மானத்தை இரத்துச் செய்யும் பொருட்டு கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |