2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2019 ஆம் நிதி ஆண்டின் தீர்ப்பனவு செய்யப்படாத பட்டியல்களை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளைப் பெறுவதற்கு பிரேரணையொன்றை பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல் - முன்னைய அரசாங்கத்தினால் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களுக்குரியதாக 367 பில்லியன் ரூபா தீர்ப்பனவு செய்யப்படாத பட்டியல்களை தீர்ப்பதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 2020 இடைக்கால கணக்கினை திருத்துவதற்கு பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு 2020 பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்படதும் சட்டமா அதிபரின் இசைவாக்கம் கிடைக்கப்பெற்றதுமான குறித்த பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |