• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019/2020 பெரும் போகத்திற்கான அரசாங்க நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளல்
- விவசாயிகளுக்கு அவர்களுடைய நெல் அறுவடைக்கு சாதாரண விலை வழங்கப்படுவதனை உறுதி செய்யும் பொருட்டு 2019/2020 பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேரடியாக நெல் சந்தைப்படுத்தல் சபையினாலும் அதேபோன்று பிரதேச செயலாளர்களின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாகவும் உரிய மாவட்ட செயலாளர்களின் / அரசாங்க அதிபர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. உரிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் ஊடாக 3,830 மில்லியன் ரூபாவைக் கொண்ட அடமான கடனை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் தேவைப்படும் நிதியினை இந்த வங்கிகளின் ஊடாக வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.