• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களை தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
- கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சினால் செயற்படுத்தப்படும் பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது கைத்தொழில் மேம்பாட்டினை நோக்காக கொண்டு செயற்படுத்தப்படும் பிரதான நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கைத்தொழில் பேட்டைகளில் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காக எட்டு (08) முதலீட்டாளர்களுக்கு காணித் துண்டுகளை குறித்தொதுக்குவதற்கு "அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டு குழுவினால்" சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீட்டாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு 726.3 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளதோடு, இதன் மூலம் நேரடியாக 270 தொழில்வாய்ப்புகள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க இந்த காணித் துண்டுகளை இனங்காணப்பட்ட முதலீட்டாளர்களுக்கு குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.