• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட மண் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் செயற்பாடு
– நாடு முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களிால் அரசுடமையாக்கப்பட்ட மண் மற்றும் மரங்களை மதவழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் நிருமாணிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்காக சலுகை விலையில் வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததோடு, இவ்வாறு சலுகை விலையில் வழங்கும் காலமானது காலத்திற்கு காலம் நீடிக்கப்பட்டு இறுதியாக 2019 12 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் மதவழிபாட்டுத் தலங்களுக்கு மாத்திரம் தேவையான மண் மற்றும் மரங்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் இந்த செயற்பாட்டினை மேலும் ஒரு (01) வருட காலத்திற்கு நீடிக்கும் பொருட்டு நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.