2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாறை - தீகவாபி தூபியினை மீள் வடிவமைப்பதற்காக செங்கல் கொள்வனவு செய்வதற்கு கேள்வி கோருதல் - அம்பாறை - தீகவாபி தூபியினை மீள் வடிவமைப்பதற்காக செங்கல் கொள்வனவு செய்வதற்கு தேசிய ரீதியில் போட்டிகர அடிப்படையில் கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதற்கிணங்க கிடைக்கப்பெற்றுள்ள 08 விலைமனுக்கள் இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவினால் மதிப்பிடப்பட்டு சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 07 வழங்குநர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, தேவையான செங்கற்களை இந்த 07 வழங்குநர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரும் புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |