2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிதி (திருத்த) சட்டமூலம் - அமைச்சரவையினால் 2019‑11‑27 ஆம் திகதியன்று அங்கீகரிக்கப்பட்டவாறு, அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார புத்துயிரளிப்பு முன்னெடுப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட படுகடன் மீள் கொடுப்பனவு வரியானது இல்லாதொழிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, 2020‑01‑01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக படுகடன் மீள் கொடுப்பனவு வரியை இல்லாதொழிப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள நிதி (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |