2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனைவிடத்திற்கான விசேட நுழைவுப்பாதை - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நுழையும் அத்துடன் அதிலிருந்து வௌியேறும் பெருமளவான பயணிகள் காரணமாக உச்ச செயற்பாட்டு நேரத்தில் விமான நிலையத்திற்கான அணுகுவழி கடும் நெரிசல் மிக்கதாகவுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், விமான நிலையத்திற்கான இலகுவான அணுகுவழியை வழங்கும் பொருட்டு முதலீட்டுச் சபை மற்றும் மினுவாங்கொடை வீதியிலிருந்து இரு வரிசை, இரட்டை வீதிகளை உள்ளடக்கிய புறம்பான விமான நிலைய அணுகுவீதியொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 600 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீடொன்றுக்கு உட்பட்டு, உரிய வீதியை நிர்மாணிப்பதற்கு Airport and Aviation Services (Sri Lanka) Ltd., நிறுவனத்திடமிருந்து அதற்கான நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |