2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பழவகை சார்ந்த உற்பத்திகளுக்காக தொழிற்சாலையொன்றை நிறுவுதல் - பால் சார்ந்த பானவகைகள் மற்றும் பேக்கரி உற்பத்திகளுக்குத் தேவையானவாறு தயாரிக்கப்பட்ட பழ வகைகள் சார்ந்த மூலப் பொருட்களை வழங்கும் உலகின் பாரிய டென்மார்க் வழங்குநரான ORANA நிறுவனத்தினால் பழவகை சார்ந்த உற்பத்திகளுக்காக தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு பன்னலையிலுள்ள கைத்தொழிற்பேட்டையிலிருந்து சுமார் இரண்டு ஏக்கர் காணித் துண்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை யொன்றை முன்வைத்துள்ளது. உத்தேச கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு உரிய முதலீட்டாளர் திட்டமிட்டுள்ளதோடு, இந்த கட்டத்தின் கீழ் 30 தொழில் வாய்ப்புகள் புதிதாக உருவாகும். இதற்கிணங்க, ORANA நிறுவனத்திற்கும் இலங்கை தொழினுட்ப அபிவிருத்தி சபைக்கும் இடையில் உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்வதற்கு உட்பட்டு, உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பன்னலை கைத்தொழிற்பேட்டையிலிருந்து காணித் துண்டொன்றை வழங்கும் பொருட்டு கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |