• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம்
- காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்த துறைமுகத்திற்கு அண்மையில் சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இதற்கிணங்க, துறைமுகத்திற்கு அண்மையில் 15 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான காணித் துண்டினை 52 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கு உட்பட்டு, உடைமையாக்கிக் கொள்வதற்கும் தனியார் உரிமை பாராட்டும் மேலும் 35 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியினை நட்டஈடு செலுத்தி காணி கொள்ளல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் உடைமையாக்கிக் கொள்வதற்குமாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.