2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹங்கேரியின் மனித வளங்கள் அபிவிருத்தி அமைச்சுக்கும் இலங்கையின் உயர்கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுக்கும் இடையில் கல்வி மற்றும் விஞ்ஞானம் சார் அறிவினை பரிமாறிக் கொள்வதற்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டமொன்று தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல் - 'சுபீட்சத்தின் நோக்கு' அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக மனித வள அபிவிருத்தியின் ஊடாக அறிவினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தினை நோக்கிய அபிவிருத்தி திறமுறை நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக இந்நாட்டு மாணவர்களுக்கு வௌிநாட்டில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஹங்கேரி அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. உத்தேச உடன்படிக்கையின் மூலம் ஹங்கேரி அரசாங்கத்தினால் இலங்கை மாணவர்களுக்கு வருடாந்தம் 20 புலமைப்பரிசில் வாய்ப்புகள் உரித்தாவதோடு, மூன்று (03) வருட காலப்பகுதிக்குள் 60 புலமைப்பரிசில் வாய்ப்புகள் இலங்கைக்கு கிடைக்கப் பெறும். வருடாந்தம் ஐந்து ஹங்கேரிய மாணவர்களுக்கு இந்நாட்டில் கல்வி அல்லது ஆராய்ச்சி வாய்ப்புகளின் பொருட்டு இலங்கை அரசாங்கத்தினால் புலமைப்பரிசில் வழங்கப்படும்.
இதற்கிணங்க, ஹங்கேரிய அரசாங்கத்தின் மனித வளங்கள் அபிவிருத்தி அமைச்சுக்கும் இலங்கையின் உயர்கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுக்கும் இடையில் கல்வி மற்றும் விஞ்ஞானம் சார் அறிவினை பரிமாறிக் கொள்வதற்கான புலமைப்பரிசில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுவதற்கும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக புலமைப்பரிசில் பரமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தை உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்து வதற்குமாக உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |