• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
25 பாலங்களை மீள நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் 03 சிவில் வேலை பொதி சார்பில் மதியுரைஞர்களுக்கான கேள்வி
- 25 பாலங்களை மீள நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 10 மில்லியன் குவைத் தினார்களை வழங்குவதற்கு அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்று செய்யப்பட்டுள்ளது. மேல், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பிலுள்ள சேதமடைந்த மற்றும் குறுகிய பாலங்கள் 08 இனை மீள நிர்மாணிப்பதற்கு இந்த கருத்திட்டத்தின் 03 ஆவது பொதிக்கு உரியதாகும். இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்தக் கருத்திட்டத்தின் பொதி 03 க்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை M/s A/l-Abdulhadi Engineering Consultancy (AEC) JV With Consulting Engineers and Architects Associated (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.