2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையிலுள்ள கண்டல் சூழல் தொகுதிகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றின் நிலைபேறான பயன்பாடு தொடர்பிலான தேசிய கொள்கை - சுற்றாடல் சமத்தன்மையை பேணி கரையோரப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கு கண்டல் சூழல் தொகுதிகள் மிக முக்கிய பணிகளை நிறைவேற்றுகின்ற போதிலும் தற்போது பல்வேறுபட்ட மனித செயற்பாடுகள் காரணமாக இவை அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன. இந்த நிலைமையைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கண்டல் சூழல் தொகுதிகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றின் நிலைபேறான பயன்பாடு தொடர்பிலான நிபுணர்கள் குழுவின் வழிகாட்டலில் உரிய சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் கண்டல் சூழல் தொகுதிகளின் நிலைபேறான தன்மையினை உறுதிசெய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |