• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்த்தனபுர, வயம்ப, ருகுணு, கொழும்பு, சப்பிரகமுவ, பேராதனை, மொரட்டுவை மற்றும் இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியை துரிதப்படுத்துதல்
- 2021 கல்வி ஆண்டில் உள்வாங்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்தால் அதிகரிக்கும் நோக்கில் ஶ்ரீ ஜயவர்த்தனபுர, வயம்ப, ருகுணு, கொழும்பு, சப்பிரகமுவ, பேராதனை, மொரட்டுவை மற்றும் இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகங்களில் இனங்காணப்பட்டுள்ள 13 நிர்மாணிப்புக் கருத் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் 2020 - 2022 நடுத்தவணைக் கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.