• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விஞ்ஞான தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையைத் தாபித்தல்
- விஞ்ஞான தொழினுட்பம் மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு செயலகத்தை தேசிய விஞ்ஞான தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையாக பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் நியமிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்குப்பட்டுள்ளது. சட்டவரைநர் திணைக்களத்தினால் உரிய சட்டத்தினை வரையும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' என்னும் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இலங்கையை சர்வதேச புத்தாக்க மையமொன்றாக மாற்றும் நோக்கத்தினை வெற்றி கொள்ளும் பொருட்டு இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவின் பணிகள், பொறுப்புகள் மற்றும் தத்துவங்கள் என்பவற்றையும் உத்தேச தேசிய விஞ்ஞான தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையின் விடய நோக்கெல்லைக்குள் வரும் விதத்தில் உரிய ஏற்பாடுகளை வரையப்பட்டு வரும் சட்டத்தில் உள்ளடக்கி குறித்த சட்டமூலத்தை வரையும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.