• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்டத் துறையின் ஊதியம் தொடர்புபட்ட பிரேரிப்பினை நடைமுறைப்படுத்துதல்
- 'சுபீட்சத்தின் நோக்கு' என்னும் கொள்கை பிரகடனத்தின் மூலம் பெருந்தோட்ட துறையில் சேவை புரிபவர்களுக்கு நாளொன்றுக்கு 1,000/- ரூபா என்னும் ஆகக்குறைந்த ஊதியமொன்றை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக பெருந்தோட்ட துறையில் சேவை புரிபவர்களுக்கு நாளொன்றுக்கு 1,000/- ரூபா என்னும் ஆகக்குறைந்த ஊதியமொன்றை செலுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.