2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிரதம அமைச்சரின் அலுகலகத்தின் கீழ் தாபிக்கப்பட்டிருந்த கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை இல்லாதொழித்தல் - 'சுபீட்சத்தின் நோக்கு' என்னும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அரசாங்க சேவையின் சகல துறைகளுக்கும் பொருத்தமானவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் 2015 ஆண்டிலே பிரதம அமைச்சரின் அலுகலகத்தின் கீழ் தாபிக்கப்பட்ட கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்லும் தேவை இல்லையென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த அலுவலகத்தை இல்லாதொழிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |