2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் நிதி உதவியுடன் கண்டி சுரங்கப் பாதை நிர்மாணிப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - கண்டி நகரப் பிரதேசத்தில் வாகன நெரிசலுக்குத் தீர்வொன்றாக மாற்று சுரங்கப் பாதையொன்றை நிர்மாணித்தல் பொருத்தமுடையதென்று இனங்காணப்பட்டுள்ளது. கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் நிதி உதவியுடன் கண்டியில் மாற்று சுரங்கப் பாதையினை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும், இந்தக் கருத்திட்டம் தொடர்பான செயற்பாடுகள் தாமதமடைந்துள்ளன. இக்கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு 252.30 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகு மென்பதுடன் கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியமானது 199.27 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தொகை கொண்ட நிதி வசதிகளை வழங்குவதற்கு இணங்கியுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட மாற்று சுரங்கப் பாதையின் நிர்மாணத்திற்கான கருத்திட்டம் தொடர்பிலான பெறுகைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |