2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திற்கு உடமையாக்கிக் கொள்ளல் - கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப்பாதைக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்திற்கும் சமீபமாகவுள்ள முக்கியமான அமைவிடத்தில் அமைந்துள்ள நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலையானது அதன் உள்ளடக்க பிரதேசத்தின் வைத்தியசாலைகளுக்கும் அதேபோன்று அதனைச் சுற்றி அமைந்துள்ள தொடர்புபடுத்தும் வைத்திய சாலைகளுக்கும் அதன் சேவைகளை வழங்குகின்றது. மேலும், விமான நிலையத்தை வந்தடையும் இடைமாறிச்செல்லும் பயணிகளுக்கும் அதேபோன்று விமானப் பணியாளர் குழுவுக்கும் அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கும் இவ்வைத்தியசாலையானது அதன் சேவைகளை வழங்குகின்றது. டெங்கு மற்றும் டெங்கு இரத்தம் வௌியேறல் (haemorrhagic) காய்ச்சல் என்பவற்றின் சிகிச்சை முகாமைத்துவத்திற்கான சிறந்த நிலையமாக இந்த வைத்திய சாலையின் டெங்கு முகாமைத்துவ நிலையம் அறியப்படுகின்றது. இந்த வைத்தியசாலையானது, தற்போதுள்ள அதன் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு வரிசை அமைச்சின் நேரடிப் மேற்பார்வையின் கீழ் தொழிற்படுவது பொருத்தமுடையதாகவிருக்குமென்று இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மேல் மாகாணத்தின் மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீழ் தற்போதுள்ள கூறப்பட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |