2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க - தனியார் கூட்டு தேசிய முகவராண்மையை மூடுதல் – 2017 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கிணங்க 20 ஆளணி கொண்ட பதவியணியொன்றுடன் திறைசேரி செயலாளரையும் ஏனைய அதிகாரிகளையும் உள்ளடக்கிய ஆலோசனை சபையொன்றுடன்கூடிய நிதி அமைச்சின் அலகொன்றாக அரசாங்க - தனியார் கூட்டு தேசிய முகவராண்மை தொழிற்படுகின்றது.
அரசாங்கமானது அதன் செயற்பாடுகளை வினைத்திறனாக்கி தொழிற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் இந்த அலகை இனிமேலும் பேணுவது தேவையற்றதென்பது இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க கூறப்பட்ட அலகின் மூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரமளிக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |