• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை பராமரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் தொடர்பான உத்தேச வேலைத்திட்டம்
– இலங்கையில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக வருடாந்தம் சுமார் 80 மனித மரணங்களும் சுமார் 250 காட்டு யானைகளின் மரணமும் அறிக்கையிடப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக சொத்துக்கள் மற்றும் பயிர் சேதங்கள் காரணமாக கணிசமான அளவு பொருளாதார ரீதியிலான நட்டமும் நாட்டிற்கு ஏற்படுகின்றதென இனங்காணப்பட்டுள்ளது. அதலால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களை குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான பணிகளை செய்வதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் கிராமிய பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் ஒழுங்குறுத்துகை குழுக்களை தாபிப்பதற்கும் அதன் பொருட்டிலான ஆலோசனைகளை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் ஊடாக உரிய மாவட்ட செயலார்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கும் பொருட்டு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.