• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2020 - 2022
- உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 'உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டமானது' 2016 – 2018 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் போதுமான நிதி ஏற்பாடு இல்லாமை அதேபோன்று எதிர்பார்க்கப்படாத காலநிலை என்பன காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அடைய முடியாமற் போயுள்ளது. இதற்கிணங்க பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை விருத்தி செய்தல், பின் அறுவடை சேதங்களை குறைத்தல், பெறுமதிசேர்க்கப்பட்ட புதிய உற்பத்திகளை இனங்காணுதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, காட்டு மிருகங்களினால் ஏற்படும் சேதங்களை குறைத்தல், பண்ணைகளின் அபிவிருத்தியின் மூலம் விதை மற்றும் நடுகை பொருட்களின் உற்பத்திகளை மேம்படுத்துதல், பாரம்பறிய அறிவு மற்றும் செயற்பாடுகளின் மூலம் சுற்றாடல் நட்புறவுமிக்க விவசாயத்தை ஊக்குவித்தல், கமத்தொழில் சுற்றுலா திட்டங்களை பிரபல்யப்படுத்துதல், 'சௌபாக்கியா' கமத்தொழில் உற்பத்தி கொத்தணி கிராமங்களை தாபித்தல் போன்ற கருத்திட்டங்களை மாகாண மற்றும் பிரதேச மட்டத்தில் 2020 – 2022 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.