2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலி பெலிகஹ சந்தி பிரதேசத்தில் நீதிமன்ற கட்டத்தொகுதியின் நிர்மாணிப்பு வேலைகளை மீண்டும் மேற்கொள்தல் – பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டு தற்போது நிர்மாணிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள காலி பெலிகஹ சந்தி பிரதேசத்தில் புதிய நீதிமன்ற கட்டத்தொகுதியின் நிர்மாணிப்பு வேலைகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் ஆலோசனையின் கீழ் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதற்காக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |