2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளப்பெறுதல் - 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் பயங்கரவாத எதிர்ப்பதற்கு புதிய சட்டத்தை ஆக்கும் நோக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலமானது பாராளுமன்றத்தின் சருவதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சட்டமூலத்திலுள்ள சில ஏற்பாடுகள் சம்பந்தமாக பல்வேறுபட்ட தரப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சட்டமூலத்தை மீளப்பெறும் பொருட்டு வெளிநாட்டு உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |