• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளான அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- கடந்த காலப்பகுதிக்குள் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களுக்கு ஆளாக்கும் நோக்கில் அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை இலக்காகக் கொண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்குப் புறம்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்தகைய நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் பொருட்டு இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரான திரு.ஜகத் பாலபெட்டபந்தி அவர்களின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு 2019‑12‑10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த குழுவின் செயலாளராக கடமையாற்றும் பொருட்டு சட்டத்தரணி (திரு) சுமுது கே.விக்கிரமராச்சியை நியமிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.