• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலைத் துறையின் புத்துயிரளிப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்
- தேயிலைச் செய்கையை பிரதான ஏற்றுமதி தொழிற்துறையொன்றாக மாற்றும் நோக்கில் 2020 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு ஆகக்குறைந்தது 10 சதவீதத்தால் அதன் இறக்குமதியினை அதிகரிப்பதற்கு 'சிலோன் ரீ' இறக்குமதி செய்யும் நாடுகளை ஊக்குவிப்பதற்கு இயலுமாகும் வயைில் இலங்கை தேயிலைச் சபையுடனும் வர்த்தக திணைக்களத்துடனும் இலங்கை வௌிநாட்டு தூதரகங்களின் உரிய அதிகாரிகளுடனும் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும், தேயிலை தொழிலின் முக்கிய பங்கினை நிறைவேற்றும் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் இதற்கு தடையாகவுள்ளது. முக்கியமாக கடந்த சில வருடங்களினுள் நடைமுறையிலிருந்த மட்டுபடுத்தப்பட்ட நிதி மற்றும் வரி முறைகள் அதேபோன்று மீள் ஏற்றுமதிக்காக தேயிலை இறக்குமதி செய்வதற்கு இடமளிப்பதற்கு நடைமுறையிலிருந்த சட்டங்கள் உட்பட ஒழுங்குவிதிகள் நீக்கப்பட்டமை இந்த நிலைமைக்கு காரணமாய் அமைந்தனவெனவும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் தேயிலைத் தொழிலை நிலையானதும் போட்டிகரமான ஏற்றுமதி வருமான வழியொன்றாக மாற்றி இதற்குரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெருமளவானோரின் தொழிலின் நிலையான தன்மையை உறுதி செய்யும் விதத்தில் தேயிலைத் துறையின் புத்துயிரளிப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.