2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கணனி மூலம் கற்பித்தலுக்கான e - கற்றல் வளங்கள் வடிவமைக்கும் பொருட்டு தாபிக்கப்படவுள்ள தேசிய நிலையத்தை ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் நிர்மாணித்தல் - பாடசாலைகளில் தகவல் தொழினுட்பக் கல்வி மற்றும் கல்விக்கான தகவல் தொழினுட்ப பாவனையை முறைப்படுத்தல் சார்பில் தேசிய மட்ட விடயம் சார்ந்த பொருளடக்கம் / மென்பொருள் மற்றும் கனணிப் பிரயோக தொழினுட்ப நிலையமொன்றை குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் நாரங்கல்லவத்த காணியில் நிர்மாணிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தேச நிலையமானது கொழும்பிலிருந்து சுமார் 90 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளமையினால் இத்தகைய தூரம் கூடிய இடமொன்றில் இந்த நிலையத்தை தாபிப்பதன் மூலம் எழக்கூடிய நடைமுறைப் பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த நிலையத்தை ஹோமாகம பிரதேச செயலகப் பிரிவின் பிட்டிபன பிரதேசத்தில் தாபிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |