• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன்பள்ளி கல்வி பற்றிய தேசிய கொள்கை
- பிள்ளைகளின் முன்பருவகால அபிவிருத்தியின் பொருட்டு முன்பள்ளிகள் ஊடாக உயர் பங்களிப்பு வழங்கமுடியுமென இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று சில முன்பள்ளி ஆசிரியர்கள் / கவனிப்பாளர்கள் தொழில் தேர்ச்சியோ அல்லது போதுமான கல்வித் தகைமைகளோ அற்றவர்களென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பயிற்றப்படாத முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் 3-5 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளின் அபிவிருத்திக்கு பொருத்தமற்ற கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை பற்றியும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சகல விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த துறைசார்ந்த நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் அக்கறையுள்ள தரப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி பற்றிய தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.