• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தேசிய பௌதிக திட்டமிடலை இற்றைப்படுத்தல்
- 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய பரப்பளவு முறைமை தொடர்பான பயன்பாட்டின் புதிய அணுகுமுறைக்கு அமைவாக இந்த உத்தேச கொள்கைக் கூறுகளை ஒன்றிணைப்பதற்கு தேசிய பௌதிக திட்டமிடலை இற்றைப்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கிணங்க அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்புபட்ட சகல நிறுவனங்களுக்கும் நாட்டின் பௌதிக சுற்றாடலின்பால் நேரடியாக தாக்கத்தினைச் செலுத்தும் அபிவிருத்தி பணிகளை திட்டமிடுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் பௌதிக சுற்றாடலை அபிவிருத்தி செய்வதற்கு இடைநேர்விளைவாக பரப்பளவு, வசதிகள் மற்றும் சேவை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றைத் தாபிப்பதற்கும் தேசிய மட்டத்தில் வழிகாட்டும் பொருட்டு விரிவான கட்டமைப்பொன்றை வழங்குவதற்கும் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையை உலகில் நவீன நாடொன்றாகவும் போட்டிகரமான பொருளாதாரத்துடனும் கூடியதாகவும் மாற்றுவதற்கும் அதன் பின்னர் இந்த நிலைமையை பேணிச் செல்வதற்கான வசதிகளை பாதுகாப்பதற்குமான சூழலை கொண்டுள்ள பௌதிக சுற்றாடல் சார்பில் திட்டமொன்றினை தயாரிப்பது இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தின் ஊடாக இலங்கையின் தேசிய பௌதிக திட்டமிடலை இற்றைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடய முன்வைப்புகள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .