• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சப்பிரி கமக்' - மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
– கிராமிய வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை விருத்தி செய்வதனையும் இதன் மூலம் கிராமிய மக்களின் சமூக பொருளாதார நிலைமையினை மேம்படுத்துவதனையும் நோக்காக கொண்டு, 'சப்பிரி கமக்' என்னும் மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாட்டிலுள்ள 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அனைத்தையும் தழுவும் விதத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றில் 2,000,000/- ரூபா பெறுமதிமிக்க கருத்திட்டங்களை 2020 சனவரி 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.