• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரகாரம் சட்டத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமமர்ப்பித்தல்
- அரசாங்கத்தின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' என்னும் தேசிய கொள்கை பிரகடனத்தில் நாட்டில் பயிர் செய்யக்கூடிய பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளையும் அதேபோன்று உள்நாட்டில் உற்பத்திசெய்யக்கூடிய பொருட்களை இயலுமானவரையில் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. நாட்டில் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அந்நிய செலாவணி நாட்டிற்கு வௌியே செல்வதனை கட்டுப்படுத்துவதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிணங்க ஏலக்காய், கராம்பு, மஞ்சள், மிளகு, கருவா, சாதிக்காய், பாக்கு, புளி, உளுந்து போன்ற சரக்குப் பொருட்களையும் பட்டம், வெசாக்கூடு மற்றும் ஊதுபத்தி போன்ற பொருட்களினதும் இறக்குமதியினை கட்டுப்படுத்துவதற்காக 2019‑12‑06 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியில் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழுள்ள ஏற்பாடுகளை விதித்துரைத்து பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.