2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஒன்றுக்கொன்று தொடர்புடைய நவீன வீதி வலையமைப்பொன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துதல் – 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' என்னும் தேசிய கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக உயர் பொருளாதார விருத்தியினை அடைவதற்குத் தேவையான முக்கிய காரணியான வீதி வலையமைப்பு முறையை நவீனமயப்படுத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வாகன நெரிசல் கூடுதலாக நிலவுகின்றதென இனங்காணப்பட்ட பிரதேசங்களில் வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்கள் என்பவற்றை குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் 3 – 5 கிலோமீற்றர் இடைவௌியில் முந்திச் செல்லும் பாதை வழியினை நிர்மாணித்தல், வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை குறைப்பதற்கு சர்வதேச தரங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றவாறு முழுமொத்த வீதி வலையமைப்பினதும் மேற்பரப்பை புதிதாக நவீனமயப்படுத்துதல் பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேகப் பாதைகள் என்பவற்றுக்கு இலகுவாக செல்லக்கூடிய 100,000 கிலோமீற்றர் 'மாற்று வீதி வலையமைப்பொன்றை' அபிவிருத்தி செய்தல் இந்த மாற்று வீதி வலையமைப்பிற்கு செல்வதற்கான கிராமிய வீதிகளை விருத்தி செய்தல் போன்ற முன்னுரிமை கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|