2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தண்டனை வழங்கப்பட்ட ஆட்களை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் செக் குடியரசுக்கும் இடையே ஒப்படைப்பதற்காக ஏற்படுத்திக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உடன்படிக்கை - 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக இலங்கையில் நீதிமன்றம் ஒன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் இடப்பட்ட வேறுநாட்டு பிரசையொருவருக்கு குறித்த தண்டனையை அவர் குடியுரிமை வகிக்கும் நாட்டிலேயே கழிப்பதற்கான சாத்தியம் உள்ள அதேவேளை, வேறு நாட்டில் சிறைத் தண்டனைக்கு ஆட்பட்டுள்ள இலங்கை பிரசையொருவருக்கும் குறித்த தண்டனையின் மீதிக்காலத்தை இலங்கையிலேயே கழிப்பதற்குமான சாத்தியம் நிலவுகின்றது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை ஏற்புடைத்தாக்கிக் கொள்வதற்கு இலங்கைக்கும் உரிய மற்றைய நாட்டுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வது அவசியமானதாகின்றது.
இதற்கிணங்க, இலங்கையிலும் செக் குடியரசிலும் தண்டனை வழங்கப்பட்ட ஆட்கள் இரு நாட்டினதும் சட்டங்களுக்கு அமைவாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்படைப்பது சம்பந்தமான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |