• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க காணிகளை முகாமிப்பதற்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
- காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் வழிகாட்டலில் 2019 திசெம்பர் மாதத்திலிருந்து 2020 மார்ச் மாதம் வரை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 11 நிகழ்ச்சித்திட்டங்கள் சம்பந்தமான தகவல்கள் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிணங்க, காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் அரசாங்க காணி கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் காணி கச்சேரிகளை நடாத்தி உரிமப்பத்திரங்கள், கொடைப்பத்திரங்கள், மற்றும் குத்தகை பத்திரங்கள் வழங்குதல், நடமாடும் மற்றும் வௌிக்கள தின நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் உரித்து நிர்ணய பதிவு கட்டளைச்சட்டத்தின் கீழ் உரிமை சான்றிதழ்களை வழங்குதல், அரசாங்கத்தின் காணித்தரவு முறைமையை முறைப்படுத்துதல், வீதி வரைபடங்களை புதிதாக தயாரித்து வௌியிடுதல் மற்றும் காணி வழிகாட்டல் கோவையைத் தயாரித்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சரினால் மேலும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்குரியதாக குத்தகைதாரர்கள் பாதிக்கப்படாத வகையில் குத்தகை தொகையினைச் செலுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இலகுவான முறையொன்றை வகுத்தமைக்கும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும்கூட அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.