2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை பராமரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் தொடர்பான உத்தேச செயற்பாடு - நாட்டில் எழுந்துள்ள மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலானது சகல தரப்பினர்களினதும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ள தேசிய பிரச்சினையொன்றாக மாறியுள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள மின்சார வேலிகளை முறைப்படுத்தி பராமரிப்பதற்கும் இதற்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களைப் பெற்றுக் கொள்வதற்குமாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மாவட்ட செயலாளர்கள் அடங்கலாக உரிய சகல தரப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |