2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
Z-Score முறையின்படி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக தற்போது பயன்படுத்தப்படும் மாவட்ட அடிப்படைக்குப் பதிலாக பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய விஞ்ஞான ரீதியிலான முறையினை அறிமுகப்படுத்துதல் - சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பினை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக இருந்தாலும் தற்போதும் மாகாண மற்றும் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே கல்வி வசதிகள் உட்பட கல்வியின் தரம் என்பவற்றில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் தற்போது அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவுசெய்வதற்கு மாவட்ட அடிப்படையில் Z-Score முறைக்குப் பதிலாக பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய விஞ்ஞான ரீதியிலான முறையினை அறிமுகப்படுத்தும் பொருட்டிலான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு உரிய விடய துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது சம்பந்தமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |