• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பு - நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு
- உற்பத்தி திறன் கொண்ட பிரசைகள், மகிழ்ச்சியுடன் வாழும் குடும்பம், நட்பண்பும் ஒழுக்கமும் கொண்ட சமூகம் மற்றும் சபீட்சம் மிக்க நாடு என்னும் நான்கு நோக்கங்களை வெற்றி கொள்வதற்காக பத்து கொள்கைகளைக் கொண்ட வேலைத்திட்டத்துடன் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை பிரகடனமான "நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" என்பதை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்பதற்கும் அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரசாங்க நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் என்பன அவற்றின் பணிகளை இதற்கிணங்க நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு இந்த நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்குமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.