2019-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
"பிவித்துரு லங்கா" தேசிய சுற்றாடல் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்ட - சுற்றாடல் முகாமைத்துவத்தின் பொறுப்புக்கள் பற்றி பொதுமக்களின் அறிவினை மேம்படுத்தி அதன்பொருட்டு மக்களின் பங்களிப்பினை அதிகரித்தல் அதேபோன்று உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட ஏனைய உரிய தரப்பினர்களின் நேரடி பங்களிப்பினைப் பெற்றுக்கொள்தல் என்பன பொருட்டு திட்டவட்டமான வேலைத்திட்டமொன்றை தயாரிக்கும் தேவையானது இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கழிவுகளை வகுப்பீடு செய்யும் நிலையங்களைத் தாபித்தல், தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு எரிதொட்டிகளை (Incinerators) வழங்குதல், கலப்பு உர இடங்களை விருத்தி செய்தல் மற்றும் கலப்பு உர இடங்களை புதிதாக தாபிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், சுற்றாடல் பாதுகாப்பு பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், நாட்டின் சுற்றாடலை முகாமிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்பாடுகளையும் தொடர்ந்தும் மேற்கொள்ளல் என்பன பொருட்டு "பிவித்துரு லங்கா" தேசிய சுற்றாடல் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்னும் பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |