• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் முழு ஆசிரியர் பதவியணியையும் பட்டதாரிகளாக்கும் பொருட்டு தேசிய கல்வி கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்கள் என்னும் தரத்திற்கு தரமுயர்த்துதல்
- அதிமேதகைய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட "சுபீட்சத்தின் நோக்கு" என்னும் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "வளங்கள் கொண்ட பிரசைகள் : அறிவுபூர்வமான சமூகம்" என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களின் தொழில்சார் தன்மையை மேம்படுத்தும் பொருட்டு இலங்கையில் முழு ஆசிரியர் சமூகத்தையும் பட்டதாரிகளாக ஆக்குவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேசிய கல்வி கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்கள் என்னும் தரத்திற்கு உயர்த்தி ஆசிரியர்களுக்கு பட்ட தகைமைகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை வழங்குவது சம்பந்தமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதே போன்று, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி மற்றும் சட்ட பணிகளை நிறைவேற்றுவதற்காக கல்வி மற்றும் உயர்கல்வி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.