2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis முறையினைப் பயன்படுத்தி 'வீட்டிலேயே இரத்த சுத்திகரிப்பு முறைமையினை' அறிமுகப்படுத்தும் கருத்திட்டம் - சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis முறையினைப் பயன்படுத்தி வீட்டிலேயே இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையினை பெற்றுக் கொள்ளக்கூடிய இரத்த சுத்திகரிப்பு முறைமையினை அறிமுகம் செய்யும் கருத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |