2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திரவ பெற்றோலிய வாயுவின் அவசரமான கொள்வனவு - 2019 செப்ரெம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் செய்முறை வசதிகளின் பால் தொடுக்கப்பட்ட தாக்குதல் காரணமாகவும் இலங்கையில் திரவ பெற்றோலிய வாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக கேள்வி அதிகரித்தமையினாலும் நாட்டில் கடந்த நாட்களில் திரவ பெற்றோலிய வாயு பற்றாக்குறை காணகிடைத்தது. இதற்கிணங்க, 2019 நவெம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் சந்தை கேள்வியை ஈடுசெய்வதற்காக அவசர கொள்வனவொன்றாக திரவ பெற்றோலிய வாயு 12,000 மெற்றிக் தொன் கொள்வனவு செய்வதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |