2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டதாரி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குத - வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் நிலைமை முடிவுற்றதன் பின்னர், புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்ட இளைஞர்களில் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்த 65 பேர்களுக்கு பட்டதாரி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்பட்டன. புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் அதிபதி பணியகத்தின் புனர்வாழ்வளிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்ட மேலும் 20 இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நியமனங்களை வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |