• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாடு முழுவதும் அனர்த்தத்திற்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை பிரகடனப்படுத்துதலும் அத்தகைய ஆபத்துக்கள் உள்ள பிரதேசங்களில் மண்சரிவு அனர்த்த மதிப்பிடல் செயற்பாட்டினை விரிவுபடுத்துதலும்
- மண்சரிவு ஆபத்துமிக்க பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பத்து (10) மாவட்டங்களுக்கு மேலதிகமாக மொனராகலை, குருநாகல், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஆபத்துக்குள்ளாகக்கூடிய பிரதேசங்களை பிரகடனப்படுத்துவதற்கும் தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பின் மண்சரிவு அனர்த்த மதிப்பிடல் முறைமையினை அறிமுகப்படுத்து வதற்குமாக பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.