2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குத - கலமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தில் இந்த ஆண்டு யூன் மாதம் பரவிய தீ காரணமாக குறித்த இந்த துறைமுகம் சார்ந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான படகுகள் மற்றும் வலைகள் உட்பட உபகரணங்கள் சேதமடைந்தன. ஆதலால் இந்த கடற்றொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக குறித்த கடற்றொழிலாளர்களுக்கு படகுகள், இயந்திரங்கள் மற்றும் கடற்றொழில் கருவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |